இரட்சிப்பு – 1

இலவசமாய், தேவ கிருபையின் மேல்யுள்ள விசுவாசத்தினால்

நம்முடைய வாழ்க்கையில் மூன்று விதமான இரட்சிப்பு தேவை.
1. முதலாவது நம்முடைய ஆவி இரட்சிப்படைய வேண்டும்.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;ரோமர் 3:23-24

ஆவிக்குரிய இரட்சிப்பு, இலவசமாய், தேவ கிருபையினால் உண்டான கிறிஸ்து இயேசுவின் மீட்பை விசுவாசிப்பவர்கள் யாவர்மீதும் கிரியை செய்கிறது.


இரட்சிப்பு – 2

வாயினாலே அறிக்கை, இருதயத்திலே விசுவாசம்.

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.